காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஆசிரியைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷ் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பூங்கொடியின் பரிந்துரையின்பேரில், யோகேஷ் இந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
சில மாதங்கள் கழித்து நேற்று பள்ளிக்குச் சென்ற யோகேஷ், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை அரிவாளால் வெட்டினார். தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பூங்கொடிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் யோகேஷை ஆசிரியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…
TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…
Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…
Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…