தன்னை விட்டு விலகி செல் என்று கூறிய கள்ள காதலியை சரமாரியாக குத்திய கள்ளக்காதலன்…!

சென்னை: தன்னை விட்டு விலகி சென்ற கள்ளக்காதலியை நடுரோட்டில் வழிமறித்து கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கள்ளக்காதலன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தேனாம்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (37). இவர், நேற்று மாலை நுங்கம்பாக்கம் புதுத் தெரு அருகே நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் நிர்மலாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிர்மலாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்திவ்ிட்டு தப்பினார்.இதில் வலி தங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்டப்படியே நிர்மலா கீழே விழுந்தார். தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: நிர்மலா வசித்து வரும் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (40) என்பவர் கத்தியால் குத்தியது தெரியவந்தது. நிர்மலாவுடன் ஜார்ஜ் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விவகாரம் நிர்மலாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் கள்ள உறவை விட நிர்மலா முடிவு ெசய்தார். கள்ளக்காதலன் ஜார்ஜுடனான உறவை படிப்படியாக குறைத்து வந்துள்ளார். இது ஜார்ஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்றுமுன்தினம் நிர்மலாவை உறவுக்கு ஜார்ஜ் அழைத்துள்ளார். அதற்கு நிர்மலா, ‘கணவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இனி வேண்டாம். தொடர்பை விட்டுவிடுவோம்’ என்று கூறியுள்ளார். உடனே கோபமடைந்த ஜார்ஜ், ‘நீ என்னுடன் வராவிட்டால் உன்னை கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் ஜார்ஜை நிர்மலா கடுமையாக திட்டியிருக்கிறார். ேநற்று நிர்மலா தோழி ஒருவரை பார்த்து விட்டு நுங்கம்பாக்கம் ஜெகநாதன் ெதரு வழியாக புது தெரு அருகே நடந்து வரும் போது திடீரென ஜார்ஜ் வழிமறித்து, கத்தியை எடுத்து நிர்மலாவின் வலது பக்க கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான ஜார்ஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment