பெண்களை கதி கலங்க வைக்கும் நிர்வாண இளைஞரால் கடும் பீதி …?

கதக்: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஷீரளகட்டேபாவி கிராம பெண்கள் கடந்த சில நாட்களாக தூக்கத்தை தொலைத்து அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அச்சத்திற்கு காரணம், நல்ல வாட்ட சாட்டமாக உள்ள இளைஞர் ஒருவர் தனியாக இருக்கும் பெண்கள் முன் திடீரென நிர்வாணமாக காட்சி கொடுப்பதுடன், அவர்களை விரட்டிச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்து தொல்லை கொடுத்து வருகிறார்.
பெண்கள் மீது பாய்ந்து தொல்லை கொடுப்பது அல்லது தூரத்தில் இருந்து கையால் சைகை காட்டி அழைப்பது, கண்ணடித்து கூப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞனை பார்க்கும் பெண்கள் சத்தம் போடுகிறார்கள்.

இதை கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர் தலைமறைவாகி விடுகிறார். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞனை தேடி கிராம மக்கள் மேற்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதுபோன்ற சம்பவம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கங்கனகொப்பா கிராமத்தில் நடந்து பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாவேரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த இளைஞர் தான் கதக் மாவட்டத்திற்கும் வந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 

author avatar
Castro Murugan

Leave a Comment