அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அடங்கிய ‘ஸ்மார்ட்’ கார்டு – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை அதில் இடம்பெறச் செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதிய பாடத் திட்டமானது வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கும்.
தமிழக கல்வித் துறையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பாடங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனை மாற்ற இருக்கிறோம்.
மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பின்னர் மக்களிடம் கருத்து கேட்கப்படும். கல்வியாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தப் பின்னர், அடுத்தக் கல்வியாண்டு முதல், அவை பாடமாக வெளியிடப்படும்.
மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலான பயிற்சி மையங்கள் 500 இடங்களில் அமைக்கப்படும். வருகிற 20-ஆம் தேதிக்கு பின்னர் இதற்கான பணிகள் தொடங்கும்.
அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை பற்றிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும். ‘ஸ்மார்ட்’ வகுப்புகளும் தொடங்கப்படும்.
தொழிலதிபர்களின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க, பள்ளி திறந்த நாளில் இருந்து பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

Dinasuvadu desk

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago