வடசென்னை: அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
வடசென்னையில் வில்லிவாக்கம், எழுபூர், R.K.நகர், திருவெற்றியூர் ஆகிய ரேசன் மண்டல அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. வில்லிவாக்கம் பகுதியில் தலைவர் தமிழ்செல்வி மற்றும் துணைத்தலைவர் விமலா ஆகியோர் தலைமை தாங்கினார், , எழும்பூரில் மாநில குழு உறுப்பினர் பவானி நாகராணி தலைமை பொறுப்பேற்று நடத்தினார். R.K.நகரில் செயலாளர் தவமணி தலைமையில் போராட்டம் நடத்தினர். திருவெற்றியூர் மாவட்ட செயலாளர் பாக்கியம் பகுதி செயலாளர் ஆருமுகலட்ச்சுமி தலைமையில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது