தூத்துக்குடி சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

தூத்துக்குடி சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி 100 யாக குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை நடந்தது. அதனை தொடர்ந்து நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி நடந்தது.
காலை 5.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானமும் அதன் பின்னர் கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *