இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான், உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.
இந்தப் போட்டி, தோனியின் 300-வது போட்டியாக அமைய உள்ளது. 2004-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அறிமுகமான தோனி, இதுவரை 9 ஆயிரத்து 608 ரன்களை குவித்துள்ளார்.