தளபதி ரசிகர்களுக்கு நிகழ்ந்த பெரும் சோகம்

தல தளபதி படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழாதான். இவர்களுக்கு கட்டவுட், பேனர், பாலாபிஷேகம், நலத்திட்டங்கள் என பட்டையை கிளப்புவார்கள் அவர்களது ரசிகர்கள்.

மேலும் தற்போது தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் என்னென்ன செய்தார்கள் என நாம் அறிந்திருப்போம்.

இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் லவ்டுடே ஸ்ரீநாத்  என்பவர் விஜய் படம் ரிலீஸ் அன்று கட்டவுட் வைத்து விட்டு வீடு திரும்பும்போது பேருந்து மோதி அகால மரணமடைந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து அண்மையில் ‘போக்கிரி சைமன்’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் விஜய் மற்றும் அவரது ர்சிகர்களுக்கு பெரிய சோகத்தை தந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment