இந்தியருக்கு உதவியால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் நிருபர், 2 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் ஹமீத் அன்சாரி. இவருக்கு இன்டர்நெட் மூலம் பாகிஸ்தான் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஹமீத் அன்சாரி கடந்த 2012ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அவர் உளவு பார்க்க வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் பெண் நிருபர் ஜீனத் ஷாஷாதி அவருக்கு செய்ய நினைத்தார் . இவர் தனியார் டிவி சேனலில் பணியாற்றினார். அவர் ஹமீத் அன்சாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெஷாவர் உயர் நீதிமன்றத்திலும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதன்பின் இவரை காணவில்லை. ஜீனத் குடும்பத்தினர், அவரை தேடும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டனர். ஜீனத் பற்றியும் காணாமல் போனவர்களை விசாரிக்கும் ஆணையம் விசாரித்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஜீனத் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தேச விரோதிகளால் கடத்தப்பட்ட ஜீனத், பலுசிஸ்தான் பழங்குடியினர் உதவியுடன் மீட்கப்பட்டதாக விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஜாவேத் இக்பால் தெரிவித்தார்.
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…