இந்திய நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி கூட வாங்க காசு இல்லாமல் இருக்கிறதா மத்திய அரசு…!

அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் அடக்கம் செய்திருக்கிறது மத்திய அரசு…..

ராமருக்கு கோவில் கட்ட பல்லாயிரம் கோடி,சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 5000 கோடி,சத்திரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க 2500 கோடி,இந்து மத காவியங்களில் இருக்ககூடிய மரணமில்லா வாழ்வினை அளிக்ககூடியதாக கருதப்படுகிற புஷ்பாஞ்சலியை கண்டு பிடிக்க 85 கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது மத்திய பிஜேபி அரசு…

ஆனால் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படகூடிய இராணுவத்தில் பணியாற்ற கூடிய ராணுவ வீரர்களுக்கு ஒரு சவப்பெட்டி வாங்க கூட பணமில்லாம இருக்கிறரா பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது மிகபெரிய கேள்வியாகவே உள்ளது…..?

author avatar
Dinasuvadu desk

Leave a Comment