பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் குஜராத் திரும்பினர்..!

பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் குஜராத் திரும்பினர்..!

ஆமதாபாத்: பெங்களூருவுக்கு, ‘கடத்தி’ செல்லப்பட்டுள்ள காங்., எம்.எல்.ஏ.,க்கள் 44 பேர் குஜராத் திரும்பினர். ஆமதாபாத் விமான நிலையத்தில் காங்., சார்பில் குஜராத் ராஜ்சபா எம்.பி., பதவிக்கு போட்டியிடும் அகமது பட்டேல் வரவேற்றார். ராஜ்யசபா தேர்தல்: குஜராத்தில், மூன்று ராஜ்சபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் நாளை(ஆக., 8) நடக்கிறது. பா.ஜ., சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால், காங்., சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. திரும்பினர்: காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்யதவர், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும், ஆறு காங்., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், பீதியடைந்த காங்.,மேலிடம், குஜராத் காங்., – எம்.எல்.ஏ.,க்களை பெங்களூருவுக்கு, ‘கடத்தி’ சென்றது. இந்நிலையில் தேர்தலையொட்டி பெங்களூரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் 44 எம்.எல்.ஏ.,க்கள் ஆமதாபாத் திரும்பினர். அவரை அகமது பட்டேல் வரவேற்றார்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *