மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை உத்தரவாதப்படுத்துவதில் தொடர்ச்சியாக முனைப்பு காட்டி வருவது பாராட்டிற்குரியது. கேரள அரசின் முன்முயற்சியால் கொச்சி மெட்ரோ ரயிலில் 26 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் பணி வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளும், பணி முடித்து இரவு நேரத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள (பிங்க் பேட்ரோல்) பெண் காவலர்களின் ரோந்து, சேர்த்தது ஆகியவை இத்திசை வழியில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று முன்பு இருந்த மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்று தன்னுடைய நிலைபாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் சமூகரீதியிலும் சட்ட ரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
7-10-2017
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…
View Comments
Wow, amazing weblog format! How long have you been blogging for?
you made running a blog glance easy. The whole glance of your site is wonderful, as smartly as the content material!
You can read similar here prev next and that was wrote by Tomoko95.