#BREAKING: கருப்பு பூஞ்சை -தமிழகத்தில் 847 பேர் பாதிப்பு..!

  • தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் வெளியாகியுள்ளது.
  • கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பைகள் ஆம்போடெரிசின்-பி மருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பி ஆம்போடெரிசின்-பி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.  தமிழகத்தில் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையை சமாளிக்க போதுமான அளவுக்கு மருந்து குப்பிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் நிலவரத்திற்கு தகுந்தாற்போல் மருந்துகளை அனுப்பி வைப்பதாக மத்திய அரசு பதில் அளித்தாலும் போதுமான அளவுக்கு  மருந்துகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி கொண்டு வருகிறது.

 

author avatar
murugan