வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு….பாஜக விமர்சனம்..!!

வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு….பாஜக விமர்சனம்..!!

வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து காங்கிரஸ் கட்சியை பாஜக கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யபட்டது.கடந்த தேர்தலில் டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை  ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இவரின் இந்த குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.  இந்த நிலையில், பாஜகவின் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில் , 2014ஆம் ஆண்டு தேத்தல் மக்கள் பாஜகவிற்கு அளித்த ஆதரவு.காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆனியன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விட்டது.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியானது காங்கிரஸ் கட்சியினால்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகச்சி என்று கூறினார்.மேலும் அவர் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டு தேர்தலில்  மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் என்று அவர் விமர்சித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *