தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்க பாஜக முயற்சி – திருமாவளவன்

தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவை சார்ந்தவர்கள் தமிழகத்தில் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது. தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தமிழகத்தில் ஒரு முக்கியமான சக்தியாக உருப்பெற வேண்டும் என்று பாஜகவினர் கணக்குப்போட்டு செய்கிறார்கள். ஆளுநர் வாகனம் மீது கற்கள், கருப்புகொடிகள் வீசப்படவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் மத வெறுப்பை ஊக்கப்படுத்த அக்கட்சி முயற்சி எடுத்து வருவதாகவும் குற்றசாட்டினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்