தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மறைமலை நகரில் மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து தனது ஆட்சியை நிலைநாட்டி கொண்டியிருக்கிறது. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் சரிவை கண்டு வருகிறது. பிரதமர் மீதமான நம்பிக்கையே இதற்கு காரணம்.
வரப்போகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தனது முழு பலத்தை வெளிப்படுத்தும். ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு அர்ப்பணித்து கொண்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சீர்சிருத்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர். நாடு முழுவதும் நடக்கின்ற தேர்தல்களில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…