குற்றபின்னணி வழக்கு பிஜேபி முதலிடம் : MP ,MLA க்களை தடைவிதிக்க முடியாது. உச்சநீதிமன்றம்..!!

குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற MP , MLAக்களுக்கு தடை விதிக்க முடியாது என தீர்பளித்துள்ளது.

குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் ஊழல் வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பான மனுக்களை விசாரித்து வந்தது.பல்வேறு அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்கள் பதில்களை தாக்கல் செய்துள்ளன.

குற்றபதிகிக்கை தாக்கல் செய்தாலே அவர்கள் மீது  6 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்றும் குற்றம்  நிரூபிக்கப்பட்டாள் அவருக்கு தேர்தலில் நிற்கமுடியாத  வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் வழக்கில் இதுவரை இந்தியாவில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 184 பேர் மீது குற்றபின்னனி வழக்கு உள்ளது.

அதாவது மக்களவை உறுப்பினர்களில் 34 சதவீதம் பேர் குற்றப்பின்னணி வழக்கு தொடர்புடையவர்கள்.இதில் பாரதீய ஜனதா கட்சின்  97 பிரதிநிதிகள் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.மொத்தமுள்ள MPக்களில் 112 MPக்கள் மீது  பல்வேறு பிரிவுகளில் கொலை , கொலை முயற்சி , கொள்ளை முயற்சி , ஈப்டிசிங்  என வழக்கு உள்ளது.

இதில் கொலை வழக்கு  10 MPக்கள் மீதும்  ,கொலைமுயற்சி 17 MPக்கள் மீது வகுப்புவாத விரோதம் வழக்கு 17 MPக்கள் மீதும்  ,கொள்ளை முயற்சி வழக்கு  10 MPக்கள் மீதும் உள்ளது.மாநிலங்களை உறுப்பினர்கள் 233 பேரில் 44 பேர் மீது அதாவது 19 சதவீதம் MPக்கள் மீது  குற்றப்பின்னணி வழக்கு உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 4896 பேரில்  1581 பேர் மீது கிரிமனல் வழக்கு உள்ளது.இது 33 சதவிதம் ஆகும்

இந்தியாவிலே BJP கட்சி பிரதிநிதிகள்  523 பேர் குற்ற பின்னணி வழக்கு உள்ளது.இதில் 337 பேர் மீது கடுமையான குற்ற வழக்கும் , 51 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கும் உள்ளது.

நாடாளுமன்றமே சட்டம் இயற்றலாம் , அரசியல் கட்சிகள் அடிப்படை நாகரிகத்தை கடைப்பிடித்து குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளகளாக நிறுத்துவதை தடுக்கக வேண்டுமென்றும் , குற்றபின்னணியில் உள்ள வேட்பாளர்கள் முழு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவும் என்றும், நாடாளுமன்றத்தில் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டிடும் மாதிரியான சட்டத்தை வடிவமைக்க வேண்டும்.உழலும் ,லஞ்சமும் நிறைந்திருப்பது  இருப்பது கவலைளிக்கிறது.குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தாலே போட்யிட தடைவித்ககின்ற இடத்தில நாங்கள் இல்லை என்று உச்சநீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment