நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்-மக்களவையில் மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாஜக எம்.பி

சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.அவர் பேசுகையில்,32 ஆண்டுகளாக காந்தியின் மீது வஞ்சம் வைத்திருந்தேன் என்று காந்தியை கொன்ற கேட்சே தெரிவித்ததாக கூறினார் ராசா.
இந்த வேளையில் தான் பாஜகவின் எம்.பியான  பிரக்யா சிங் தாகூர்  குறுக்கிட்டு பேசினார்.அவர் பேசுகையில்,நடைபெரும் விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.மேலும்  கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் நிலவியது.
ஏற்கனவே  பிரக்யா சிங் தாகூர்  நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.