இ- பாஸை தடை செய்ய வேண்டும் – பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!

இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பேருந்துகள், விமானங்கள் அனைத்தும் இயங்கபடாமல் தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அண்மைக் காலங்களாக அரசு மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் அனுமதி பெற்று மக்கள் வெளியில் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் வேல்முருகன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசிய தேவையின்றி செல்வதை கட்டுப் படுத்தும் விதமாகவும், இதனால் மற்றவர்களுக்கு கொரானா பரவலை தடுக்கும் விதமாகவும் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அதிகம் ஆக்கப்பட்டுள்ளது. வேலை தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்கு உள்ளேயோ வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal