ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38) நேற்று காலை நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் ஆகும்.
சில நாள்களாக காஷ்மீரில் பாஜக தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. கடந்த 6-ம் தேதி பாஜக பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது என்பவர் அவரின் வீட்டின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…