‘பாஜக பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது’ – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜகவின் முக்கிய பிரபலம்…!

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ தன்மோய் கோஷ்.

பிஷ்ணுபூர் எம்எல்ஏ தன்மோய் கோஷ் அவர்கள், பாஜக-வில் இருந்து விலகி, அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, பங்கூரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் நகரத்தின் டிஎம்சி இளைஞர் தலைவராகவும், உள்ளூர் குடிமை அமைப்பின் கவுன்சிலராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோஷ், ‘மேற்கு வங்க மக்களிடையே பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எனவேதான் நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். மேற்கு வங்கத்தின் நலனுக்காக அனைவரும் திரிணாமுல் காங்கிரசில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் முதல்வர் மம்தா பானர்ஜியின் கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், பழிவாங்கும் அரசியலை செய்து பாஜக மாநில மக்களிடையே குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.