பூங்காவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகி…! நடந்தது என்ன?

டெல்லியில் சுபாஷ் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகி.

ஜி.எஸ்.பாவா டெல்லி பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். அவருக்கு வயது 58. இவர் அப்பகுதியில் உள்ள ஃபதே நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் டெல்லியில் சுபாஷ் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று காலை தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜி.எஸ்.பாவாவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், சுபாஷ் நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.