வங்கியைக் கொள்ளையடிக்கும் போது திருடன் உயிரிழந்த வினோத சம்பவம்.!

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற திருடன் பயன்படுத்திய மின்சார கட்டர் விலகி திருடன் கழுத்தில் பட்டு உயிரிழந்தார். 

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி கிளையில் உள்ள அறையை வெட்ட அவர் பயன்படுத்திய மின்சார கட்டர் தற்செயலாக திருடனின் கழுத்தில் பட்டதால் திருடன் உயிரிழந்தார் என்று வரசியா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், வாங்கி அறையின் கம்பி வெட்டிய பின்பு கட்டர் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் அவர் அதை சரிசெய்யும் பொழுது கையிலிருந்து விலகி கட்டர் தெரியாமல் கழுத்தில் பட்டு உயிரிழந்தார் என்று கூறினார்.

இதற்கிடையில்  நிதின் வோரா என அடையாளம் காணப்பட்ட திருடனின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வங்கி அறைக்குள் ரத்தத்தில் மூழ்கிய படி திருடன் உயிரிழந்து கடந்ததை கண்ட வங்கி மேலாளரால்  போலீசாரிடம்  தெரிவித்தார். பின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.