இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம்…!

இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் தான் இந்தியப் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய். இவர் மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் தனது முதன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்து, 1998-ல் எனும் ஹல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட் எனும் நாவலை எழுதியுள்ளார்.

இந்த நாவலுக்கு பெட்டி ட்ராஸ்க் விருது கிடைத்துள்ளது. மேலும் இவரது நூல்களுக்கு உலக அளவில் வழங்கப்படக்கூடிய முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருது கிடைத்துள்ளது. மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெருமையுடைய இந்திய பெண்மணி கிரண் தேசாயின் 46 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal