அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடனும் உயிர் தப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே தனி அறைக்குள் சென்று சுட்டுக் கொன்றுள்ளார். இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரித்த பொழுது விருந்தில் கலந்துகொண்டு காயமடைந்த பெண் ஒருவரின் காதலன் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு கொள்வதற்காக தனி அறைக்குள் சென்றதாகவும் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவலர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்துவிட்டு உயிரிழந்த நபர் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டது? கொலையாளி ஏன் தன்னையும் சுட்டுக் கொண்டார், என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறை அதிகாரி வின்ஸ் நிஷ்கி என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…
Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…
ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…