அசாம் மாநிலத்தில்,பறவைகள் தற்கொலை செய்யும் ஒரு வினோதமான சம்பவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அசாமில் உள்ள ஜடிங்கா என்னும் மலைக் கிராமத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் பறவைகள் படையெடுத்து செல்கின்றன.ஆனால்,இனப்பெருக்கத்திற்காக பறவைகள் அங்கு செல்லவில்லை.மாறாக,தற்கொலை செய்து கொள்ளவே அங்கு செல்கின்றன.இதை நம்ப முடியாவிட்டாலும் அதான் உண்மை.
ஜடிங்கா கிராமத்தில், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள மரங்களில் மோதியும்,மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தும் தற்கொலை செய்து கொள்கின்றன.இதனால்,இந்த குறிப்பிட்ட நாட்களில் ஜடிங்கா கிராமத்தினுள் வெளியாட்கள் நுழைய அசாம் அரசு தடை விதித்துள்ளது.
மேலும், பறவைகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அசாம் அரசு கண்காணிப்பு கோபுரங்களை ஜடிங்கா கிராமத்தில் அமைத்தது.இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,ஜடிங்கா கிராமத்தில் நிலவும் கடுங்குளிர்,நிலா வெளிச்சம் இல்லாத இரவு நேரம் மற்றும் மழை பெய்யும் தருணம் ஆகிய மூன்றும் ஒரே சமயத்தில் வரும்போது பறவைகளின் இறப்புகள் அதிகமாக நடக்கின்றது.மேலும்,அங்கு உள்ள காந்த பண்புகளின் மாற்றம் பறவைகளின் மூளையை பாதித்து அவைகளை தற்கொலைக்கு தூண்டுகிறது போன்ற பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.எனினும், பறவைகளின் இறப்பிற்குரிய உண்மையான காரணங்கள் புரியாத புதிராகவே உள்ளது.
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…