ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.

தமிழக மக்கள் அனைவருக்கும் இத்தனை காலங்களாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொடுக்க ஏதுவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படவுள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவரின் கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கும், இனி ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அந்த கைரேகை பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே வந்து தங்களது கைரேகையை வைத்து பொருட்கள் வாங்கி செல்ல முடியும்.

மேலும் இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு உதவி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளி பற்றிய புதிய இயந்திரப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், புதிய விற்பனை இயந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தை அலட்சியமாகவோ அல்லது தவறான முறையில் கையாண்டு சேதப்படுத்தினால் சரிசெய்வதற்கு அல்லது அந்த இயந்திரம் மாற்றி புதிதாக வழங்கப்படுவதற்கு ஏற்ற தொகையை சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர் செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

3 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

10 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

12 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

14 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

15 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

15 hours ago