பில்லூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, வெள்ளத்தால் பல இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பில்லூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. எனவே பில்லூர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்துள்ளது, 97 அடியாக அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் நான்கு மதகுகளிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

author avatar
Rebekal