பீகாரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி; 17 பேர் கவலைக்கிடம்…

பீகார் மாநிலத்தில் உள்ள நாலந்தா பகுதியில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சுமார் 5 பேர் பலியாயினர்.

மேலும் இந்த விபத்தின் காரணமாக அங்கு பணியாற்றிய சுமார் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் சுமார் 17 பேர் நிலை மிக மோசமான நிலையில் உள்ளனர். குண்டுவெடிப்பில் ஏற்பட்டதில் பட்டாசு ஆலையில் அருகில் இருந்த ஐந்து வீடுகளும் சேதமடைந்தன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment