Bihar Election 2020: “எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை” மோடியின் பகிரங்கக் கடிதம்.!

எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை என்று பீகார் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

பீகாரில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது  மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “பீகாரில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி தடம் புரட்டப்படாமல் இருப்பதற்கும், அது குறையாமல் இருப்பதற்கும் எனக்கு தேவை” என்று பிரதமர் மோடி இந்தியில் தனது நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.

பீகாரின் வாக்குகள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கப்படுவது அல்ல, வளர்ச்சிக்காக என்று பிரதமர் கூறியுள்ளார். “வாக்குகள் போடப்படுவது தவறான வாக்குறுதிகளுக்காக அல்ல, வலுவான நோக்கங்களுக்காக என்றும் மோசமான நிர்வாகத்திற்காக அல்ல, நல்லாட்சிக்காக. ஊழலுக்காக அல்ல, நேர்மைக்காக. சந்தர்ப்பவாதத்திற்காக அல்ல, சுய சார்புக்காக என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகாரில் மின்சாரம், நீர், சாலைகள், கல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கான அனைத்து துறைகளிலும் என்.டி.ஏ பணிகள் செய்துள்ளன என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த கடிதம் வெளியானது.

 

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

4 mins ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

17 mins ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

23 mins ago

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…

32 mins ago

வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…

1 hour ago

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா இன்று – இபிஎஸ்

Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…

1 hour ago