எனக்கு முகவரியே கிடையாது, கஷ்டப்பட்டு சம்பாதித்தது தான் இந்த பெயர் என அனிதா சம்பத் கண்ணீர் மல்க பேச்சு.
பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி நான்கு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று கொண்டுள்ளது. 16 பேர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பாதிக்கு பாதி நமக்கு அறிமுகமான விஜய் டிவி பிரபலங்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்வது தான் முதல் நண்பர் பகிர்வாக பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நடைபெறுவது.
அது போல இன்று அனிதா சம்பத் இது குறித்து பேசுகையில், தனக்கு முகவரி கிடையாது எனவும், ஏற்கனவே இரு தினங்களாக அவருக்குள்ள பிரச்சினையை கூறி, யாரும் என்னை மற்றவர்களுடன் கம்பர் செய்யாதீர்கள் சகித்து செல்லக் கூடிய தன்மை எனக்கு கிடையாது எனவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தனது பெயரை கெடுத்துவிட கூடாது என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார். கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,