biggboss 3: அவங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா! கதறி அழும் அபிராமி!

உலகநாயகன் கமல்ஹசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வீட்டிற்குள் சந்தோசமான தருணங்கள், துக்கமான தருணங்கள் என சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்று வருகிறது.

இதனையடுத்து, சாக்ஷி, அபிராமியின் மனம் புண்படும்படி பேசியுள்ளார். இந்நிலையில், அபிராமி, லாஸ்லியாவிடம் சென்று, அவங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா, என கதறி அழுகிறார். மேலும், சாக்ஷியை பற்றி எல்லாம் தெரிந்தும், முகனும் சாக்ஷியுடன் உட்காந்திருப்பது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.