பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் போட்டியாளர்கள் காரணம் இதோ !

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சரவணனுக்கு, சேரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அவர் சேரனை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து, தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள சரவணன் சில காரணங்களால் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்குள்ள பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கதறி அழுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.