biggboss 3: நடிப்புக்கு மொழி தேவையில்லை! ஊமையா இருக்குறவங்களும் நடிக்கிறாங்க! கொதித்தெழுந்த மீராமீதுன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் அனுதினமும் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.

இந்நிலையில், மீராமீதுன் மற்றும் சாக்ஷி இருவருக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. மீராமீதுன், “நடிப்புக்கு மொழி தேவையில்லை, ஊமையா இருக்குறவங்களும் தான் நடிக்கிறாங்க” என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த சாக்ஷி, கலாச்சார வேறுபாடுகளை இங்கு காட்டாதீர்கள், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டு, கண்ணீர் விடுகிறார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.