பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்-மதுமிதா புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது .கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் மதுமிதாவிதிமுறைகளை மீறியதாக வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் நசரபேத் காவல் நிலையத்தில் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார் . கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்று மதுமிதா புகார் அளித்துள்ளார் .மேலும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.