முதல் நாளே மிரள வைத்த பிக் பாஸ்.. நடு இரவில் அலறிய ரச்சித்தா.!

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சில் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். பிக் பாஸ் கொடுத்த நேற்று டாஸ்கின் விதிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வெளியே உறங்கினார்கள்.

வெளியே மிகவும் கொசு கடித்து கொண்டிருந்ததால், இரவு முழுவதும் தூங்காமல், எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்களேன்- 4 நாளுக்கு ஒரு தடவை தான் பண்ணுவேன்… ரகசியத்தை உளறிக்கொட்டிய சீரியல் நடிகை.!

அதில் ரச்சித்தா மகாலட்சுமி மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார். இதனை வெளியே உறங்கிக்கொண்டிருந்த குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் பார்த்து ரச்சித்தாவிடம் எதற்காக இவ்வளவு சீக்கிரம் எழுந்துவீட்டீர்கள் என்று கேள்வி கேட்க, தூங்கும்போது சத்தம் கேட்பது போல இருக்கிறது. என்னால் சரியாக தூங்கமுடியவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ரச்சித்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜி.பி. முத்து அண்ணா சிரித்துக்கொண்டிருந்தது போல சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன் ஆனால், அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த சீசனிலிருந்தே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், ரச்சிதா இப்படி கூறியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரச்சிதா இப்படி கூறியவுடன் குயின்ஸி, ஜனனி, நிவா, மற்றும் விக்ரமன் ஆகியோர் சற்று ஷாக்காகியுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment