#BIGBREAKING: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,000-த்தை தாண்டியது.

இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்தனர்.

சென்னையில் இன்று 976 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதனால் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 25 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் பலி. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்களில் 80 பேர் அரசு மருத்துவமனையிலும், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.