bigboss 3: போலீசார் கையில் முதலில் சிக்கப்போவது யார்! வனிதாவா? மீரா மிதுனா?

bigboss 3: போலீசார் கையில் முதலில் சிக்கப்போவது யார்! வனிதாவா? மீரா மிதுனா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மீராமீதுன் மற்றும் வனிதா இருவரும் போலிஸாரால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா மீது, அவரது கணவரான ஆனந்த்ராஜ், தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகரளித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கானா போலீசார், சென்னை போலிஸாரின் உதவியுடன் வனிதாவை  கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாடல் அழகி மீரா மிதுன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை தேனாம்பேட்டை போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனர். எனவே முதலில் யார் போலிஸாரின் கையில் சிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube