தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் நடத்த வேண்டும் – கே.எல் ராகுல்

முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பார்கள் – கேஎல் ராகுல்

இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது மனதை உடைக்கும் நிகழ்வாக இருப்பதாகவும், அதிர்ச்சளிப்பதாகவும் இருந்தது. இதுகுறித்து இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையத்தில் கூறுகையில், தோனியின் ஓய்வு செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. உண்மையில் மனது உடைந்துவிட்டது.

இந்திய அணியில் இருக்கும் அனைவரும் தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்களும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும், தோனியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது எனக்கு தனி சிறப்பாகும் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்