அன்பு குரூப்பிலிருந்து இன்று அவுட்டாகும் பிக்பாஸ் போட்டியாளர்.! யார் தெரியுமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட உள்ளதை தொடர்ந்து இன்று ஜித்தன் ரமேஷ் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியானதது 69நாட்களாக ஒளிப்பரப்பப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட உள்ளதாக கமல்ஹாசன் பர்ஸ்ட் புரோமோவில் கூறியிருந்தார்.அதில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட உள்ளார் .

அதன்படி இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ்,நிஷா,சோம் ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களுள் குறைவான வாக்குகளை பெற்று இன்று ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் யார் வெளியேறுவார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.