ஐதராபாத்துக்கு வந்த சோதனை-போட்டியில் இருந்து புவனேஷ் விலகல்!??

ஐதராபாத்துக்கு வந்த சோதனை-போட்டியில் இருந்து புவனேஷ் விலகல்!??

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சார் புவனேஷ்வர் குமார், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் அணி  ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது இந்த ஆட்டத்தில் தனது 4வது ஓவரை வீச முடியாமல் சிரமப்பட்டார் வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் (இன்னிங்சின் 19வது ஓவர்), உடற்தகுதி வல்லுநர்கள் ஆலோசனையின் படி அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறினார். இதனால்  எஞ்சிய ஓவரின் 5 பந்துகளை கலீல் அகமது வீசினார்.

இந்நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிள்ளது தெரியவந்தது. இதனால் அவர் இத்தொடரில் இருந்து விலகி உரிய சிகிச்சை எடுக்க, ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையில் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.ஐதராபாத் அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) காயம் காரணமாக ஏற்கனவே விலகியுள்ள நிலையில் தற்போது புவனேஸ்வரகுமாரும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



author avatar
kavitha
Join our channel google news Youtube