பாரத் பந்த் : பேருந்துகள், ரயில்கள் மற்றும் வங்கிகள் இயங்குமா?

நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. 

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவு இல்லாத நிலையில், நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் பேருந்துகள் வளாகமாக இயக்கப்படுகிற நிலையில், தற்போது  கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாததால், பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், போக்குவரத்து கழக உயர் அதிகாரி, பொது வேலை நிறுத்தம் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் இதுகுறித்து கூறுகையில், பொது வேலை நிறுத்தம் காரணமாக நாளை பகலில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், பகல் நேரத்தில் மிகக் குறைந்த அளவில்தான் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்   மேலும் மாலை 6 மணிக்குப் பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்து சேவை தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தால், ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல வங்கிகள், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாளை வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும், பாரத் பந்தின் போது பால், காய்கறி விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவசர மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

2 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

2 hours ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

2 hours ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

3 hours ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

3 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

4 hours ago