சிறந்த வீரர் கோலி – ஐசிசி அறிவிப்பு

    அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  உலக கோப்பை டி20 ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது .

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய வீரருமான விராட் கோலியின் பார்ம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் கோலி, தான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கணிசமான ரன்களை குவித்தார். இதையடுத்து அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக    ரசிகர்கள் மற்றும் ஐசிசி குழுவினரால் விராட் கோலி  தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்வுக்கான பரிந்துரையில் நியூசிலாந்து வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அவர்களையும் விஞ்சி விராட் கோலி சிறந்த வீரராக தேர்வாகியுள்ளார்.

இவ்விருதை வெல்வதின் மூலம் 10 ஐசிசி விருதுகளைப் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெறுகிறார் விராட் கோலி.

author avatar
Aravinth Paraman

Leave a Comment