#IPL Breaking:எஞ்சியுள்ள ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபில் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது.இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,எஞ்சியுள்ள 31 போட்டிகள் கொண்ட ஐபில் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தின்,குவைத்,சார்ஜா மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உள்ளதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.