பி.சி.சி.ஐ. அதிகாரிகள் மறுப்பு! ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் விவரத்தைக் தர மறுப்பு ….

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் ஆல்ரவுண்டர் ஒருவர், ஊக்கமருந்து விதிமுறைகளை தொடர்ந்து மீறியுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வீரர் 2016-17 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் பலமுறை ஊக்கமருந்து பயன்படுத்தியதும், அது ஒவ்வொரு சோதனைகளின்போதும் தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவர் அண்மையில் ரஞ்சி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ள அதிகாரிகள், அவர் யாரென்ற விபரத்தை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ள அந்த வீரர் யார் என்பது தொடர்பான விவரங்கள் இவ்வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ. மூலம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
source: dinasuvadu.com

Leave a Comment