குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..!

தமிழகத்தில் வடமேற்கு மழை தீவிரமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தென்காசியில் அதிகமாக மழை பெய்தது.

இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் , ஐந்தருவி , பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து தண்ணீர் வரத்தின் குறைந்ததால் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மழையால் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மெயின் அருவி , ஐந்தருவி, பழைய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உள்ளது.

author avatar
murugan