13 மற்றும் 14-ம் தேதி வங்கிகள் இயங்காது…! எங்கெல்லாம் இயங்காது…!

வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டாலும், அனைத்து ஏடிஎம்கள், மொபைல் வங்கி மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் வங்கி சேவைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள், ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில், மே 13-ம் தேதி, வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை. எனவே இந்த நாளில், பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மே 14, வெள்ளிக்கிழமை அன்று பகவன் ஸ்ரீ பர்சுராம் ஜெயந்தி , ரம்ஜான்-ஈத், பசவ ஜெயந்தி, அக்ஷய திரிதியா கொண்டாட்டத்தின் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில், அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், தமிழ்நாடு, டெஹ்ராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, டெக்லி, லக்ஜி பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்ல ஆகிய மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.