வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அடுத்த மாதம் மட்டும் 14 நாட்கள் விடுமுறை.. முழு பட்டியல் இதோ!

பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும். அதனைத்தவிர்த்து, தேசிய, பொது மற்றும் பண்டிகை நாட்களில் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அந்தவகையில், பண்டிகை மாதமான அக்டோபரில் மற்ற மாதங்களை விட அதிகமான விடுமுறை வரும் என வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இம்மாதம் வரும் விடுமுறைகள், அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட பண்டிகைகள் உள்ள மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.

விடுமுறை நாட்கள்:

அக். 2 (வெள்ளிக்கிழமை) – காந்தி ஜெயந்தி – இந்தியா முழுவதும் விடுமுறை.

அக். 4 (ஞாயிற்றுக்கிழமை) – வங்கி பொது விடுமுறை.

அக். 8 (வியாழக்கிழமை) – பொது விடுமுறை (அனைத்து விடுமுறை)

அக். 10 (இரண்டாம் சனிக்கிழமை) – இந்தியா முழுவதும்.

அக். 11 (ஞாயிற்றுக்கிழமை) – வங்கி பொது விடுமுறை.

அக். 17 (சனிக்கிழமை) – பிகு – அசாம் மாநிலம்.

அக். 18 (சனிக்கிழமை) – பொது விடுமுறை -இந்தியா முழுவதும்.

அக். 23 (வெள்ளிக்கிழமை) – மகா சப்தமி – பல மாநிலங்களில் விடுமுறை

அக்.24 (சனிக்கிழமை) – துர்காஷ்டமி – பெரும்பாலான மாநிலங்களுக்கு விடுமுறை.

அக். 25 (ஞாயிற்றுக்கிழமை) – வங்கி பொது விடுமுறை.

அக். 26 (திங்கள்கிழமை) – விஜய தசமி – பல மாநிலங்களில் விடுமுறை

அக். 29 (வியாழக்கிழமை) – மிலாடி ஷாரீப் – பொது விடுமுறை (அனைத்து மாநிலம்)

அக். 30 (வெள்ளிக்கிழமை) – மிலாடி நபி – பொது விடுமுறை (அனைத்து மாநிலம்)

அக். 31 (சனிக்கிழமை) – லக்ஷ்மி பூஜை / மகாவீர் ஜெயந்தி / சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி –

லட்சுமி பூஜை – மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களில் விடுமுறை.

மகரிஷி வால்மீகி ஜெயந்தி – பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறை

வல்லபாய் படேல் ஜெயந்தி – குஜராத் மாநிலத்தில் மட்டும்.

இந்த மாதம் மட்டும் 14 நாட்களில் மட்டும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.