#IPL2020: சென்னை மீண்டும் சொதப்பலான ஆட்டம்.. பெங்களூர் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

இன்றைய 25-வது போட்டியில் சென்னை Vs பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், படிக்கல் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிஞ்ச் 2 ரன்னில் வெளியேற பின்னர், கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய படிக்கல் 33 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். படிக்கல்லை தொடந்து வந்த வேகத்தில் டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர், களம் கண்ட வாஷிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய கோலி அரைசதம் அடித்து 90* ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தனர்.

சென்னை அணி 170 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே டு பிளெசிஸ் 8 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்த சில நிமிடங்களில் 14 ரன்னில் ஷேன் வாட்சன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் இறங்கிய ஜெகதீசன், அம்பதி ராயுடு கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 33 ரன்னில் குவித்தார். அதிரடியாக விளையாடி வந்த அம்பதி ராயுடு அரைசதம் அடிக்கலாம் 42 ரன் எடுத்து வெளியேறினார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

author avatar
murugan