சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக படிக்கல், பின்ச் இருவரும் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய  இருவரும் அரைசதம் விளாசி படிக்கல் 54 , பின்ச் 52 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய கோலி 3 ரன்னில் விக்கெட்டை இழக்க இதைத் தொடர்ந்து, இறங்கிய வில்லியர்ஸ் 55 ரன்கள் எடுக்க இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர்.

பின்னர், இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ரோஹித் 8 ரன்னில் வெளியேற , பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க இவரை தொடர்ந்து குயின்டன் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணி மோசமான நிலையில் இருக்க மத்தியில் இறங்கிய இஷான் கிஷன்,  பொல்லார்ட் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 99 ரன்கள் குவித்தார். பொல்லார்ட் 60 ரன்கள்  எடுத்தார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர். இதனால், போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஒவரில் முதலில் இறங்கிய மும்பை அணி 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய பெங்களூரு அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

murugan
Tags: IPL2020

Recent Posts

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…

25 seconds ago

டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை.!

Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…

11 mins ago

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

31 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

60 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

1 hour ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

1 hour ago